குளித்து தலை உதறினாள்
காற்றில்
மழைக்கால மரப்பெண்
.........................................................
விடிந்த பொழுதில் மேக
காற்றில்
மழைக்கால மரப்பெண்
.........................................................
சலிக்காமல் காதல் செய்யும்
சூரிய-தாமரை புரியாமல்
சுற்றும் குளக்கரை வாத்துகள்
..........................................................
விடிந்த பொழுதில் மேக
ஆடைகளை சரி செய்த
வானமகள்
............................................................
நிற்கவா ? போகவா ?
மழைக்காலத்து காற்று
மேகத்தை மிரட்டியது
............................................................