தங்கமுட்டையிடும் வாத்துக்கு
பயம் ,வளர்ப்பானா? இல்லை
நம்மை அறுப்பனா ??
.............................................................................
அவளின் முத்த மழையில்
நாய்க்குட்டி ,என்னை கர்வமாய்
முறைக்கிறது
.............................................................................வறுமையில் பசி மயக்கம்
செழுமையில் செரிக்க
மறுக்கும் வயிறு
..............................................................................
வேர்வையின் ஈரம்
நிழல்களுக்கு
தெரியுமா?
..............................................................................
கத்திரி வெயிலுக்கு
வேண்டுதல் போடும்
இளநீர் பாட்டி
.............................................................................