Monday, April 26, 2010

அமைதி பிடிக்காமல்

போகும் மௌனிப்பது
நீயானால் 

Wednesday, April 7, 2010

பார்வையில் பட்ட சில காட்சிகள் :

பிள்ளையாரோடு பேரம் பேசும்
பரீட்சை நேர மாணவன்
மதிப்பென்னுக்கு ‍‍‍ தேங்காய்

.....................................................
  
வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்

.....................................................



வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி    
வெள்ளை புடவையில் 
.....................................................



மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்

......................................................


 

Tuesday, April 6, 2010

பனித்துளி

இரவு விடைசொன்னது
ஈரமான கண்களோடு
புல்வெளி

Sunday, April 4, 2010

பெண்ணே...

மௌனம் கூட ரசிப்பேன்
பேசாமல் மௌனிப்பது
நீயாய் இருந்தால்..

Friday, April 2, 2010

பிரசவம்

சிறந்த கவிதை

ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல