வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்
.....................................................
வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி
வெள்ளை புடவையில்
.....................................................
மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்
......................................................