Monday, May 11, 2015

சுமை

பனியை சுமக்கும் புல் 
ஒருபோதும் நினைப்பதில்லை 
சுமையென்று 
.....................................................................

சுகமான எண்ணம் கூட 
சுமையாகி போகும் 
காதல் விரக்தியில் 
....................................................................

தொட்டில் சேலை 
என்றும் சொன்னதில்லை
பிள்ளையை சுமையென்று 
.................................................................... 

Sunday, May 10, 2015

காடு

மரங்களுக்குள் இல்லை 
ஜாதி சண்டை , எல்லாம் 
கலந்து வளர்ந்தபடி 
................................................................
சந்தோஷமாய் ஓடும் 
காட்டாறு அம்மா மடியில் 
தவழும் பிள்ளையாய் 
.................................................................
சத்தமிடும் பறவைகள் 
காய்ந்த இலை சிறகுகள் 
மௌனம் கலைக்கும் முயற்சியில் 
................................................................
கம்பீர காவல் தெய்வங்கள் 
எல்லையில் வரவேற்கும் 
கானக வீட்டுக்குள் 
................................................................