Wednesday, July 29, 2015

கலாம் - எங்கள் கனவு நாயகன் !

உன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும்
என ஏங்கியிருப்பால்  எங்கள்  இந்திய தாய் !

கடைகோடி தீவினிலே பிறந்து
கண்ட கனவுகள் நிறைவேற
பயணம் தொடங்கினாய் !

அறிவியல் அதிசயம் செய்தாய்
ஆசிரியர் என்றே பெருமை கொண்டாய்
நாடு முழுதும் அன்பை விதைத்தாய் !

தேசத்தின்  உச்சம் தொட்டாலும்
அதை விட நேசத்தில்
எல்லோர் இதயமும் கலந்தாய் !

கடமை முடிந்ததாய் நினைத்தாயோ ?!
எங்கள் கண்கள் குளமாக கனநேரத்தில்
காலன் துணைகொண்டு உறக்கம் கொண்டாய்!

தீவு பூமி தேடி திரும்பி வந்தாயே தமிழா
நிரந்தர உறக்கத்துடன் ...... நீ இல்லாத
தேசம் தவிக்கிறது கனத்த மனதுடன்!

இனி நிம்மதி நித்திரை கொள் ..
நீ விதைத்த கனவு விதைகள்
விருட்சமாய் உருவெடுக்கும்!

உன் எளிமையும் பண்பும் தன்னடக்கமும்
யுகங்கள் கடந்து தீராமல்
உன் பெருமை பேசும்!

எதிர்காலமே கனவு கொள்ளும்
மீண்டும் இந்தியத்தாய்
உன்னை ஈன்றெடுக்க.....

காத்திருப்போம் 
கலாம் அவர்களே
கனவுகளுடன் !!!