Saturday, August 15, 2015

எதிரிகளே!


எதிரிகளே! என் இளமை 
பருவம் மட்டும் தான் 
பாதுகாப்பானது உங்களுக்கு!
...................................................................
சினம் என்பது 
என் குணம் அல்ல 
சுபாவம்
....................................................................
வேட்டையாடுவது 
என் இரைக்கு மட்டுமல்ல 
அது என் விளையாட்டு 
....................................................................
என் கால் தடங்கள்  
இடும் பூமி எல்லாம் 
என்றும் போர்க்களம் தான்
....................................................................
ஆணவம் அல்ல 
என் வார்த்தைகள் 
அதுவே என் அம்சம் 
...................................................................


Tuesday, August 11, 2015

கவிதை உறவு

விரல் சூப்பும்
அழுமூஞ்சி பாப்பா
அம்மா தோளில்  சாய்ந்தபடி
...........................................................
பேரன் வருகைக்கு
பலகாரம் செய்து காத்திருக்கும்
கிராமத்து பாட்டி
..........................................................
இலவசமாய் தங்கையை
தூக்கி சுற்றும்
அண்ணன் ராட்டினம்
.........................................................
தூங்கும் போது
தலை கோதும் அப்பாவின்
மிடுக்கான அன்பு
.........................................................
தூர தேசத்து மகனின்
தொலைபேசி
மணியோசை
.........................................................