Sunday, March 28, 2010

சாபம்

தூண்டில் புழுக்களின் சாபம்

மீன்களுக்கு உடனே
மரணம்

Thursday, March 25, 2010

கொம்பு

அழகாய் கொம்பு வளர்த்து
பின் வருத்தபட்டது மான்
வலையில் சிக்கியதும்

மேகமே

தினமும் புதுக்கவிதை ஆயிரம்

எழுத உனக்கு மட்டுமே
முடிகிறது மேகமே

தலைப்புக்கு வேலையில்லை

சிறந்த கவிதை

ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................


கோபுரம் மேல் நிழலில்
தூங்கும் பூனை.
யாரும் சகுனம் பார்க்கவில்லையா?

.................................................................



ஒவ்வொரு முறையும் கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து
நீர் இறைக்கும் வாளி
..................................................................


Saturday, March 13, 2010

வலி

சிறந்த கவிதை
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல.

Wednesday, March 10, 2010

படையல்

காக்கை மீதம் வைக்கும்
உணவுக்கு காத்திருக்கிறது
பூனை பொருமையுடன்

Friday, March 5, 2010

அன்பே...

கவிதைகள் பல தந்தாய்.
தலைப்பாய் மட்டும்
நீயே நின்றாய்!

................?

அவள்
கன்னத்து மச்சத்துக்கு
கோபம்.
போட்டியாய் வந்த
புது மூக்குத்தியின் மீது!!