Tuesday, August 11, 2015

கவிதை உறவு

விரல் சூப்பும்
அழுமூஞ்சி பாப்பா
அம்மா தோளில்  சாய்ந்தபடி
...........................................................
பேரன் வருகைக்கு
பலகாரம் செய்து காத்திருக்கும்
கிராமத்து பாட்டி
..........................................................
இலவசமாய் தங்கையை
தூக்கி சுற்றும்
அண்ணன் ராட்டினம்
.........................................................
தூங்கும் போது
தலை கோதும் அப்பாவின்
மிடுக்கான அன்பு
.........................................................
தூர தேசத்து மகனின்
தொலைபேசி
மணியோசை
.........................................................


No comments:

Post a Comment