Saturday, April 30, 2016

வெய்யில்

இளநீர்  கிழவி வியர்த்து 
நிற்கிறாள் நிழலில் 
இளநீர்  வெட்டி ஓய்ந்து 
................................................................

மனிதம் எஞ்சியுள்ளதை 
சொல்ல அங்காங்கே 
மோர் பந்தல்கள் 
................................................................

அம்மா முந்தானை 
குடையில் அழகாய் 
குழந்தை சாய்ந்தபடி ...
...............................................................

தாகம் தீர்க்க குருவிகளுக்கு 
நீர் பாத்திரங்கள்!
குருவிகள் எங்கே ?????
............................................................... 



No comments:

Post a Comment