இளநீர் கிழவி வியர்த்து
நிற்கிறாள் நிழலில்
இளநீர் வெட்டி ஓய்ந்து
................................................................
மனிதம் எஞ்சியுள்ளதை
சொல்ல அங்காங்கே
மோர் பந்தல்கள்
................................................................
அம்மா முந்தானை
குடையில் அழகாய்
குழந்தை சாய்ந்தபடி ...
...............................................................
தாகம் தீர்க்க குருவிகளுக்கு
நீர் பாத்திரங்கள்!
குருவிகள் எங்கே ?????
...............................................................
No comments:
Post a Comment