மரங்களுக்குள் இல்லை
ஜாதி சண்டை , எல்லாம்
கலந்து வளர்ந்தபடி
................................................................
சந்தோஷமாய் ஓடும்
காட்டாறு அம்மா மடியில்
தவழும் பிள்ளையாய்
.................................................................
சத்தமிடும் பறவைகள்
காய்ந்த இலை சிறகுகள்
மௌனம் கலைக்கும் முயற்சியில்
................................................................
கம்பீர காவல் தெய்வங்கள்
எல்லையில் வரவேற்கும்
கானக வீட்டுக்குள்
................................................................
No comments:
Post a Comment