Sunday, May 10, 2015

காடு

மரங்களுக்குள் இல்லை 
ஜாதி சண்டை , எல்லாம் 
கலந்து வளர்ந்தபடி 
................................................................
சந்தோஷமாய் ஓடும் 
காட்டாறு அம்மா மடியில் 
தவழும் பிள்ளையாய் 
.................................................................
சத்தமிடும் பறவைகள் 
காய்ந்த இலை சிறகுகள் 
மௌனம் கலைக்கும் முயற்சியில் 
................................................................
கம்பீர காவல் தெய்வங்கள் 
எல்லையில் வரவேற்கும் 
கானக வீட்டுக்குள் 
................................................................

No comments:

Post a Comment